ஜெயலலிதாவை பார்க்க கூடாது என சசிகலா தரப்பில் நெருக்கடி தரப்படவில்லை - ஐ.ஜி. சத்திய மூர்த்தி

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க கூடாது என சசிகலா தரப்பில் நெருக்கடி ஏதும் தரப்படவில்லை என உளவுத்துறை ஐஜி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-15 06:36 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி  ஆணையத்தில், உளவுத்துறை ஐ.ஜி. சத்திய மூர்த்தி, அப்பலோ மருத்துவர்கள் செந்தில்குமார், ரேமண்ட், மருத்துவமனை டெக்னீஷியன் மதிவாணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க கூடாது என சசிகலா தரப்பில் இருந்து நெருக்கடி ஏதும் தரப்படவில்லை எனவும் உளவுத்துறை ஐஜி சத்திய மூர்த்தி கூறியதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்