வனத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா வைக்க கோரி மனு : 2 வாரங்களில் பதிலளிக்க வனத்துறைக்கு உத்தரவு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2018-11-09 07:38 GMT
கோவை மாவட்டம் மதுக்கரை வனத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு வன பாதுகாவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி விமலா, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க வனத்துறைக்கு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்