அரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

Update: 2018-11-01 19:38 GMT
சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய  டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய  மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமா கடிதங்களை, தமிழக அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்,  சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ் நாராயணன், பொறுப்பு அரசு பிளீடராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்