ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட விவகாரம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் பாதிக்கப்படுவதாக, உரிமம் பெற்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில் நீதிபதி மகாதேவன் முன் முறையிடப்பட்டது. அதை கேட்ட நீதிபதி, உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்.