டெல்லியில் உயிரிழந்த தமிழக ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவி - சொந்த ஊரில் இறுதி அஞ்சலி

புதுடெல்லியில் தற்கொலை செய்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2018-10-29 04:50 GMT
ஈராடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜின் மகளான ஸ்ரீமதி,  ஐ.ஏ.எஸ் கனவுடன் புதுடெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் உள்ள வாஜிரம் என்ற ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வந்தார். நேற்று மாலை அவர் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, என்னை மன்னித்துவிடுங்கள் என கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற மாணவியின் பெற்றோர், உடலை விமானம் மூலம், சொந்த ஊர் கொண்டுவந்தனர்.மாணவியின் உடலை கண்ட ஊர் மக்களும், உறவினர்களும், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து அவரது உடல் எரியூட்டப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்