18 நாட்களாக நீடித்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

கடந்த18 நாட்களாக நீடித்த தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Update: 2018-10-18 21:29 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையில், கடந்த 6 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி தொழிலாளர்கள் 18 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுடன், தாசில்தார் மாணிக்கராஜ் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார்  நான்கு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் இதர பணப்பலன்களை 27ம் தேதிக்குள் வழங்குவதாக நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் ஜூஸ் கொடுத்து, உண்ணாவிரதத்தை  தாசில்தார் முடித்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்