24 மணிநேரம் தொடர்ந்து விதவிதமான சமையல்

உலக பசி தினத்தை முன்னிட்டு, 24 மணி நேரம் தொடர்ந்து விதவிதமான உணவுகளை சமைத்து ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது.

Update: 2018-10-14 20:22 GMT
உலக பசி தினத்தை முன்னிட்டு,  24 மணி நேரம் தொடர்ந்து விதவிதமான உணவுகளை சமைத்து ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்த இந்த நிகழ்வில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் உணவுகள் தயாரிக்கப்பட்டன. அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், சாலையோரம் இருப்பவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டது. அன்றாடம் வீணாகும் உணவை, ஏழைகளுக்கு கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்