கிணற்றை காணோம் என்ற நகைச்சுவை காட்சி போல இல்லாத வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பிய வட்டார வளர்ச்சி அலுவலர்...

நோட்டீஸ் அனுப்பிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கணேஷ்பாபு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2018-10-08 12:43 GMT
* இதேபோல ஒரு சம்பவம் திண்டுக்கலில் நடந்துள்ளது. அங்குள்ள தாண்டிக்குடி மலைப்பகுதியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி கணேஷ்பாபு. இவருக்கு வீட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றிட வலியுறுத்தி, கொடைக்கானல் 

* வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் என்பவர், நோட்டஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், தமக்கு தாண்டிக்குடியில் வீடே கிடையாது என்றும், நோட்டீஸ் அனுப்பிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கணேஷ்பாபு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார், மாற்று திறனாளி கணேஷ்பாபுவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்