ஒரு மணிநேரம் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் சேவை முடங்கியது.

Update: 2018-10-08 11:34 GMT
தமிழகம் முழுவதும் 900 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை டிஎம்எ​ஸ் வளாகத்தில் இதற்கான தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் 108 எண்ணை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக வேறு ஒரு எண் தற்காலிகமாக வழங்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டதால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்