மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு

சவுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள்

Update: 2018-10-07 21:03 GMT
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய விஜய், அவரது தம்பி விவேக், மிடாலம் ஸ்மைல்  ராமநாதபுரம் இளஞ்செழியன் ஆகியோர் சவுதி அரேபியாவில் உள்ள விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.  நேற்று சவுதி கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இவர்கள் எதிர்பாராத விதமாக ஈரான் கடல் பகுதியில் சென்றுவிட்டதாக தெரிகிறது.அப்போது கடற்கொள்ளையர்கள் சுட்டதில் படுகாயமடைந்த 3 பேரை சவுதி அரேபியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், படகின் கேப்டன் விஜயை,  சவுதி போலீசார் கைது செய்துள்ளதாகவும் உறவினர்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அவர்களை மீட்டு இந்தியா கொண்டு வரவேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்