பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-09-18 09:05 GMT
சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். ரிப்பன் மாளிகையின் பின்புறம் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் மற்றும் மாநகர காவல் துறை, சுகாதாரம், பொதுப்பணி, சாலை, மெட்ரோ நிர்வாகம், ராணுவம், விமானப் படை, கடலோர பாதுகாப்புப் படை, பிஎஸ்என்எல் உட்பட 40 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்