அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இருதரப்புக்கு இடையே மோதல்

பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில், காவல்துறையினர் அளித்த அனுமதியை மீறி, விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால், மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2018-09-17 21:29 GMT
பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில், காவல்துறையினர் அளித்த அனுமதியை மீறி, விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால், மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மோதலில் ஈடுபட்டதாக கூறி 17 பெண்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி , எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்