குழாயை பார்த்து நீருக்கு ஏங்கி நிற்கும் பறவைகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குளங்கள் வறண்டு கிடப்பதால், விலங்குகள், பறவைகள் குடிநீருக்காக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2018-09-14 04:36 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குளங்கள் வறண்டு கிடப்பதால், விலங்குகள், பறவைகள் குடிநீருக்காக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேடி ஊருக்குள் புகும் குரங்குகள் தானாகவே குடிநீர் குழாயை திறந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. மயில், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள், குடிநீர் குழாயை பார்த்தப்படி நீர் கிடைக்குமா என ஏங்கி காத்திருக்கின்றன. இந்த நிலையை தவிர்க்க, வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்