போக்சோ சட்டத்தில் கைதானவரை தாக்கிய விவகாரம் : 2 இளைஞர்கள் கைது

சேலத்தில், கைது செய்யப்பட்ட ஆசிரியரை செருப்பால் தாக்கியதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-07 17:02 GMT
சேலத்தில், கைது செய்யப்பட்ட ஆசிரியரை செருப்பால் தாக்கியதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் பள்ளியில் பயிலும் சிறுமியிடம், ஆசிரியர் சதீஷ் என்பவர் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில், அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் இது பொய்யான புகார் என்று கூறி, ஆசிரியரின் சகோதரர் சுரேஷ் பள்ளப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியரை செருப்பால் தாக்கியதாக கூறி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 2 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்