டெல்லியில் தேர்தல் திடீர் ஒத்திவைப்பு | Delhi | Election

Update: 2024-04-26 07:35 GMT

டெல்லியில் இன்று நடைபெறுவதாக திட்டமிட்டிருந்த மேயர் தேர்தல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.டெல்லி மேயர் தேர்தலை இன்று நடத்த இந்திய தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் தேர்தலை தள்ளி வைப்பதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், துணைநிலை ஆளுநர் அலுவலகம், தலைமை அதிகாரியை நியமிக்காததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.

Tags:    

மேலும் செய்திகள்