வெறும் காகித விருதுகளால் எந்த பயனும் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

வெறும் காகிதங்களால் ஆன விருதுகளை வழங்குவதால் எந்த பயனும் இல்லை என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Update: 2018-08-17 08:38 GMT
* கலைமாமணி விருது பெற்ற நடிகர் குமரிமுத்து இறந்ததும், அவருக்கு வழங்கியிருந்த வீடு  ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என, அவரது மனைவி புண்ணியவதிக்கு வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

* இதை எதிர்த்து புண்ணியவதி தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் , அவரது   கோரிக்கையை  பரிசீலித்து முடிவெடுக்கும்படி வீட்டுவசதி வாரியத்துக்கு உத்தரவிட்டது. 

* ஆனால், வீட்டை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் மீண்டும் கூறியதால்,   புண்ணியவதி மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், கலைத்துறைக்கு பெருமை சேர்த்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டாமல், வெறும் காகிதங்களால் ஆன விருதுகளை வழங்குவதால் எந்த பயனும் இல்லை என கூறினார். 

* மேலும், புண்ணியவதிக்கு மாற்று வீடு ஒதுக்க வாய்ப்புள்ளதா என கண்டறியுமாறு வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்