கட்ட பஞ்சாயத்து செய்வதாக கடைக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செல்போன் கடையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலிக் என்பவரின் கடைக்குள் புகுந்த கட்ட பஞ்சாயத்து நபர்கள் பணியாட்களை மிரட்டி அனுப்பிவிட்டு கடையில் இருந்த செல்போன்களை எடுத்து சென்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மாலிக் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.