"கங்குலி, டிராவிட் உலக கோப்பையை வென்றதில்லை" ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து

கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லாத காரணத்தால் ஒரு வீரரை திறமையற்றவராக கருத முடியாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

Update: 2022-01-25 08:19 GMT
கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லாத காரணத்தால் ஒரு வீரரை திறமையற்றவராக கருத முடியாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

ஓமனில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரியிடம், விராட் கோலி பதவி விலகியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த ரவி சாஸ்திரி, இந்திய அணியின் எந்த வீரர் குறித்தும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார். கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லாத காரணத்தால் ஒரு வீரரை திறமையற்றவராக கருத முடியாது எனப் பேசிய ரவி சாஸ்திரி, 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்குபெற்ற பிறகுதான் சச்சினால், ஒரு உலகக் கோப்பையை தொட முடிந்தது என்றும், கங்குலி, டிராவிட், லட்சுமணன் போன்ற சிறந்த வீரர்கள் உலகக் கோப்பையை வென்றதே இல்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்