முதியோருக்கான ஆசிய தடகளப் போட்டி : ஓய்வு பெற்ற ஆசிரியை தங்கம் வென்றார்
மலேசியாவில் நடைபெற்ற முதியோருக்கான ஆசிய தடகளப் போட்டியின் 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை திலகவதி தங்கம் வென்றுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற முதியோருக்கான ஆசிய தடகளப் போட்டியின் 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை திலகவதி தங்கம் வென்றுள்ளார். இந்தியாவிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தடகள போட்டியில் திலகவதி 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதங்கங்களை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.