இந்தியா Vs ஆஸி. - 4வது ஒருநாள் போட்டி : இமாலய இலக்கை எட்டி ஆஸி. வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மொகாலியில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் HANDSCOMB மற்றும் TURNER ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். இதனால், அந்த அணி 48வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது. இதனால், வரும் புதன்கிழமை டெல்லியில் நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.