"ஜூன் 4ம் தேதிக்கு பின்..." அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன தகவல்

Update: 2024-04-26 12:14 GMT

மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், ஜூன் மாதம் 4ஆம் தேதிக்கு பிறகு, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்