போலீஸ் ஸ்டேஷன் முன்னாலேயே... அடிதடியில் இறங்கிய அதிமுக-நாதக... கலவரமாக ரோடு... பரபரப்பு காட்சி

Update: 2024-04-16 11:41 GMT

 பாலக்கோடு காவல்நிலையம் முன்பு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா மற்றும் அதிமுக வேட்பாளர் அசோகன் ஆகியோர் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாலக்கோடு காவல் நிலையம் முன்புள்ள சாலையில் இரு வேட்பாளர்களும் வாகனத்தில் வந்தபோது தொண்டர்களூக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 3 பேர் தாக்கப்பட்டதுடன், பிரச்சார வாகனத்தின் கண்ணாடியும் உடைக்கபட்டது. இதனால் இருதரப்பினரும், ஒருவருக்கொருவர் நடுரோட்டில் மோதிக்கொண்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைய வைத்தனர். காவல் நிலையம் முன்பு நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்