"மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

ஐ.நா. பொதுசபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

Update: 2021-09-26 14:39 GMT
ஐ.நா. பொதுசபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். அவரது பதிவில், ஐ.நா பொது சபையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, பெரும்பாலான உறுப்பு நாடுகள் சபையில் இல்லை என்று கூறி உள்ளார். மோடியின் உரைக்கு யாரும் பாராட்டுகூடத் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், ஐ.நா. நிரந்தர உறுப்பு நாடு என்ற இந்தியாவின் அந்தஸ்து புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்