அசாம் தேர்தல் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

அசாம் மாநில தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

Update: 2021-03-21 08:30 GMT
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி '5  உத்தரவாதங்கள்' என்ற அடிப்படையில் பிரசாரம் செய்து வருகிறது.இதில் முக்கிய வாக்குறுதிகளாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்றும்,அரசு துறையில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை என்றும் தனியார் துறையில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலி 365 ரூபாயாக உயர்ந்தப்படும் என்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகளிரை கவரும் வகையில் இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை வாக்குறுதிகளை தவிர்த்து பெண்களுக்கு இலவச போக்குவரத்து பயணம்,அனைத்து தொகுதியிலும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பாஜகவால் மூடப்பட்ட பேப்பர் ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அசாம் மாநிலத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் நீட்டிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 

Tags:    

மேலும் செய்திகள்