"இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்தமே" - பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி

10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Update: 2021-03-01 10:10 GMT
10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் இடஒதுக்கீட்டை இனி யாராலும் தடுக்க முடியாது எனவும், நடப்பாண்டில் அரசு பணியிடங்களில் பாட்டாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பர் என தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு மற்ற சமுதாய இடஒதுக்கீட்டிற்காக பாமக போராடும் எனக்கூறியுள்ள ராமதாஸ், போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்