CAA சட்டத்தை அமல்படுத்த முடியாது - கேரள முதல்வர் திட்டவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-14 04:35 GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்த பின் குடியுரிமை சட்டம் நாட்டில் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குடியுரிமை சட்டத்தால் மாநிலத்தில் ஏற்படும் அசாதாரண நிலையை கேரள அரசு விரும்பவில்லை என்றார். இந்த பேரழிவை கேரள அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்