"மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு தசரா, தீபாவளி பண்டிகை கால முன்பணமாக, 10 ஆயிரம் ரூபாய், வட்டி இன்றி வழங்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Update: 2020-10-12 12:32 GMT
இவை தவிர பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, மாநில அரசுகளுக்கு மூலதன திட்டங்களுக்காக, 50 ஆண்டு காலத்திற்கு வட்டியில்லாத கடனாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார். சாலை கட்டமைப்பு,  நீர் மற்றும் நகர மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 4.13 லட்சம் கோடியை விட, கூடுதலாக  25 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்