அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று - அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி தொகுதியை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரான ரெட்டியார்பட்டி நாராயணன், அவரது மகன், மகள் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது,.

Update: 2020-09-24 03:37 GMT
நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி தொகுதியை சேர்ந்த  அதிமுக சட்டமன்ற உறுப்பினரான ரெட்டியார்பட்டி நாராயணன், அவரது மகன், மகள் ஆகிய மூவருக்கு கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது,. இதனை தொடர்ந்து  அவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே,  கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் ஆகியோர் கொரோனா பாதிப்பால்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்..

Tags:    

மேலும் செய்திகள்