"பழைய நிலையே தொடர வேண்டும்"- சச்சின் ஆதரவாளர்கள் ​தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பழைய நிலையே தொடர வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-25 04:07 GMT
முதலமைச்சர் அசோக் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். கொறடா உத்தரவை அடுத்து தகுதிநீக்கம் தொடர்பான இந்த நோட்டீசை எதிர்த்து சச்சின் ஆதரவாளர்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில்  தீர்ப்பளித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பழைய நி​லையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், சச்சின் தரப்பு கோரிக்கையை ஏற்று மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்