கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

Update: 2020-04-04 14:19 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மருத்துவமனைகள் கிடைக்கக்கூடிய தன்மை, சரியான தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனிநபர் பாதுகாப்பு உபகரணம், முகக்கவசம், கையுறைகள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் ஆகிய மருத்துவ உபகரணங்கள் கிடைத்தலை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்