பிரதமர் மோடி பெயரில் போலி வங்கி கணக்கு?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடியின் நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2020-04-01 08:43 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சிலர், இதிலும் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான போலி கணக்குகளில் ஒன்றை புவனேஷ்வர் குமார் என்பவர் உருவாக்கி இருப்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தும் உள்ளன. தற்போது அந்த நபரை புலனாய்வுத்துறை அதிகாரிகள் குழு தேடி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்