"காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை" - கார்த்திக் சிதம்பரம்
"திட்டத்தை என்னால் அமல்படுத்த முடியாது"
காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தால், அந்த திட்டத்தை தம்மால் அமல்படுத்த முடியாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்களத்தூர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவரிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், காவிரி குண்டாறு அமல்படுத்தக் கோரி கோரிக்கை விடுத்தார். அவர்களிடம் தாம் பொய் கூற விரும்ப வில்லை என கூறிய கார்த்திக் சிதம்பரம், காவிரி குண்டாறு திட்டத்தை அமல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டினார்.