காமராஜரை மறந்த காங்கிரஸ் தொண்டர்கள் - நினைவு நாளில் மரியாதை செய்யக்கூட ஆளில்லாத அவலம்
டெல்லியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரது நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, காங்கிரஸ் தொண்டர் ஒருவர்கூட முன்வரவில்லை.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களின் திரு உருவ சிலைகளுக்கு தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆனால் டெல்லியில் அமைந்துள்ள காமராஜர் சிலை அவரது நினைவு நாளில்கூட கவனிப்பாரற்று இருக்கிறது. மாலை அணிவித்து மரியாதை செலுத்த, காங்கிரஸ் தொண்டர் ஒருவர்கூட முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவருக்கு இந்த நிலையா என்று பலரும் வேதனை அடைந்தனர்.