தமுமுக பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது : ஹைதர் அலிக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்த ஹைதர்அலி உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-27 19:10 GMT
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்த ஹைதர்அலி உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை தலைவர் ஜவாஹிருல்லா தொடர்ந்த வழக்கை, விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது என,  ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்டம்பர் 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்