கர்நாடகா : காங்.,ஜனதா தள எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய முயற்சி

பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ள நிலையில், ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களிடம், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-13 13:00 GMT
பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ள நிலையில், ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களிடம், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி, யார் யாரோடு பேசுகிறார் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார். வருகிற 15 ஆம் தேதி, சபாநாயகர் தம்மை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் எனவே அவரை சந்தித்து விட்டு, கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்