இன்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவையின் புதிய சபாநாயகரக பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார்.

Update: 2019-06-19 01:58 GMT
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிய மக்களவை கூடியுள்ள நிலையில், புதிய சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாஜக கூட்டணி சார்பாக சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பி ஓம் பிர்லா நேற்று மனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் இருந்து 3 முறை வெற்றி பெற்றுள்ள அவரது மனுவை பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் முன் மொழிந்தனர். 

இந்நிலையில் ஓம் பிர்லாவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அவரை ஆதரிப்பதாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். எனவே, போட்டியின்றி தேர்வாகும் ஓம் பிர்லா, இன்று சபாநாயகராக பொறுப்பேற்பார் என தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்