எந்தவித ஆரவாரமின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்...

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளர் மாரிமுத்து, எந்தவித ஆடம்பரம், ஆரவாரமின்றி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2019-05-15 07:56 GMT
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளர் மாரிமுத்து, எந்தவித ஆடம்பரம், ஆரவாரமின்றி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஓட்டுநர் என்பதால் தனக்கு தானே காரை ஓட்டிக் கொண்டு, வீதி வீதியாகச் சென்ற அவர், தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார். அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொண்டர்கள் படைசூழ பிரசாரம் செய்து வரும் நிலையில், மாரிமுத்து, தனக்கு ஆதரவாக வாக்கு திரட்டியதை பொதுமக்கள் ஆச்சரியமுடன் பார்த்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்