"அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது" - அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

Update: 2019-03-21 01:34 GMT
அதிமுகவின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை சரவணன், திருவாரூர் இடைத் தேர்தல் வேட்பாளர் ஜீவானந்தம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று கூறினார். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை டிடிவி தினகரன் உட்பட எவராலும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்