மாணவர்களை போல் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டத்தில் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
அலுவலக திறப்புக்கு பிறகு பேசிய அமைச்சர், மாணவர்களை போல் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக முதலமைச்சரிடம் எடுத்துரைத்திருப்பதாக கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள இது ஏதுவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.