திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் - ப.சிதம்பரம்
தமிழகத்தில் திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் என்றும், அந்த வலிமையான அணியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்கும் என்றும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை, அயனாவரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழ்வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மு.க.தமிழரசு, மலேசிய இணை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் எப்பொழுதும் இடம்பெற்றிருக்கும் என காங்கிரஸ் தலைமை தம்மிடம் சொல்லி இருப்பதாக கூறினார்.