கேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது.

Update: 2018-09-03 03:30 GMT
திமுக சார்பில், 88 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 ராஜ்ய சபா எம்.பி-களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். 

அதன்படி, மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்ற குழுவினர் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கேரள அமைச்சர் இ.பி. ஜெயராஜனை சந்தித்து, 96 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்