நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என டி.டி.வி. தினகரன் நம்பிக்கை

Update: 2018-07-16 17:07 GMT
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார். 



Tags:    

மேலும் செய்திகள்