6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-19 08:20 GMT
டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார். பாரத் எர்த் மூவர்ஸ், ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, பவன் ஹன்ஸ், சென்டரல் எலெக்ட்ரானிக்ஸ், நிலச்சல் இஸ்பாட் நிகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் இந்த ஆண்டில் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர், Tuhin Kanta Pandey தெரிவித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தை வாங்க
சமர்பிக்கப்பட்ட 3 விருப்ப மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். 2022 மார்ச் மாதத்திற்குள் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதல் கட்ட பங்குகள் விற்பனைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். எல்.ஐ.சி நிறுவன பங்குகள் விற்பனை, இந்திய பங்கு சந்தைகளுக்கு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்