கடற்படை தளபதிகளின் மாநாடு - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய கடற்படை தளபதிகளின் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.

Update: 2021-10-18 10:17 GMT
இந்திய கடற்படை தளபதிகளின் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். கடற்படை தளபதிகள் பங்கேற்கும் 2வது வருடாந்திர மாநாடு இன்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் கடல்சார்ந்த பாதுகாப்பு, போக்குவரத்து நடைமுறைகள், நிர்வாக செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் விவாதிக்கின்றனர். இதில் பங்கேற்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டின் பாதுகாப்பு குறித்து தளபதிகளுடன் உரையாற்ற உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்