காஷ்மீரில் பீகார் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கண்டனம்

காஷ்மீரில் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-18 04:03 GMT
காஷ்மீரில் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்டு பேசிய அவர், வெளி மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தீவிர தாக்குதல் சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். இந்நிலையில், காஷ்மீரில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்