"கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள்

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் இருந்து கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-17 02:47 GMT
கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்