மேற்கு வங்கத்தில் பெய்து வரும் கனமழை - இடிந்து விழுந்த குடியிருப்பு

மேற்கு வங்கத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

Update: 2021-09-30 03:56 GMT
கனமழை  காரணமாக கொல்கத்தா, மிட்னாபூர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கனமழை காரணமாக அஹிரிடோலா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்