பெற்ற மகனை கடுமையாக தாக்கிய தந்தை - 3 வயது சிறுவன் மீது இரக்கமற்ற செயல்

தெலங்கானாவில் பெற்ற மகனை தந்தையே கடுமையாக தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-21 11:09 GMT
தெலங்கானாவில் பெற்ற மகனை தந்தையே கடுமையாக தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேடக் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் நாகராஜ். இவரது மனைவி இறந்ததால், 2-வது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி மூலம் அவருக்கு 3 வயது சிறுவன் உள்ள நிலையில், சிறுவனை கயிறுபோன்ற பொருளால் தந்தை நாகராஜ் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது, அவரது இரண்டாவது மனைவியும் அருகில் இருந்த நிலையில், சிறுவன் தந்தையால் தாக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்