10 ஆண்டு ஒரே அறையில் வாழ்ந்த ஜோடி - முறைப்படி பதிவு திருமணம் செய்தனர்

கேரளா மாநிலம் பாலக்கட்டில் காதலியை 10 ஆண்டுகளாக தனது அறையில் மறைத்து வைத்திருந்த ரஹ்மானும் சஜிதாவும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Update: 2021-09-16 07:34 GMT
கேரள  மாநிலம், பாலக்காடு அய்லூரை சேர்ந்த ரகுமான், தனது காதலியை பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் 10 ஆண்டுகள் தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஹ்மானும் சஜிதாவும்  நேற்று திருமணம் செய்து கொண்டனர். நெம்மாரா துணை பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது. நெம்மாரா சட்டமன்ற உறுப்பினர் கே.கே.பாபு திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். திருமண நிகழ்ச்சயில் சஜிதாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வெளிய வந்த ரஹ்மான், சஜிதா அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்