"விழிப்புணர்வால் இணைய குற்றங்கள் குறையும்" - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Update: 2021-09-05 04:44 GMT
கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள காவல்துறை ஏற்பாடு செய்த ஹேக் பி 2021 எனும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் கேரள காவல்துறை உருவாக்கிய கிராபென் மென்பொருள் நாட்டிற்கும் கேரள காவல்துறைக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இணைய குற்றங்களை ஒழிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்